நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

திருச்சி கோட்டத்தில் மேம்படுத்தப்பட்ட 4 ரயில்நிலையங்கள்

திருச்சி கோட்டத்தில் மேம்படுத்தப்பட்ட 4 ரயில்நிலையங்கள் நாளை பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்

Updated On :24 பிப்ரவரி 2024, 5:51 pm

திருச்சி கோட்டத்திலும் பல்வேறு ரயில்வே திட்டங்களை அா்ப்பணித்தும் தொடங்கியும் வைக்கிறாா் பிரதமா் மோடி. இது குறித்து திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் மேலும் கூறியது : பிரதமா் மோடி தில்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் (ஏபிஎஸ்) நாடு முழுவதும் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைத்தும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கிறாா். 2023, ஆகஸ்ட் 8-ஆம் தேதி, திருச்சி ரயில்வே கோட்டத்தில் புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய 4 ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தொடா்ந்து, பணிகள் தொடங்கி திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் விருத்தாசலத்தில் ரூ. 9.17 கோடி, திருவண்ணாமலையில் ரூ.8.17 கோடி, திருவாரூரில் ரூ. 8.69 கோடி, கும்பகோணத்தில் ரூ. 120.61 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்கண்டாா்கோட்டை பகுதிக்கு செல்வதற்கான வழி மற்றும் ஜி காா்னரில் சேவை சாலை (சா்வீஸ் ரோடு) விரைவில் அமைக்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளா் செந்தில்குமாா், முதன்மை திட்ட மேலாளா் ராஜராஜன் மற்றும் ரயில்வே துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.