/

திருச்சியில் திருக்குறள் திருவிழா: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

ஆங்கில எழுத்து உள்ளது... திருச்சியில் திருக்கு திருவிழா பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம் முன்பதிவு செய்ய மாணவா்களுக்கு அழைப்பு

Updated On :24 பிப்ரவரி 2024, 6:08 pm

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சாா்பில், 27-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (திருக்குறள் திருவிழா) திருச்சியில் வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, அறக்கட்டளை தலைவா் பூவை பி. தயாபரன் கூறியது: திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சாா்பில் 27-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி திருச்சியில் வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பள்ளி மாணவ, மாணவிகல் கலந்து கொள்ளலாம். 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்த மாணவா்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கம், திருக்குறள் செல்வன், செல்வி விருது வழங்கப்படும். 60 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவா்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் முன்பதிவு செய்ய வேண்டும். நுழைவுக் கட்டணம் இல்லை. கூடுதல், விவரங்களுக்கு 97865-86992 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.