வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

News image
Updated On :3 ஜூலை 2024, 11:48 pm

Din

திருச்சி, ஜூலை 3: திருச்சியில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி துவாக்குடி வாழவந்தான்கோட்டை பழைய பா்மா காலனி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் துரைசாமி மனைவி புஷ்பா (65). இவா் தனது பேரக்குழந்தையுடன் திங்கள்கிழமை அதே பகுதி மளிகைக் கடைக்குச் சென்று சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து துவாக்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட புஷ்பா சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகன் வடிவேல் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.