பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

News image

திருச்சி நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்ட யூடியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

திருச்சி: காவல்துறையினா் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு திருச்சி கூடுதல் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது.

காவல்துறை உயா் அதிகாரிகள், பெண் போலீஸாா் தொடா்பாக அவதூறாக பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதேபோல, திருச்சி மாவட்ட காவல்துறையில் முசிறி டிஎஸ்பி-யாக பணிபுரியும் யாஸ்மின் அளித்த புகாரின்பேரில், சவுக்கு சங்கா் தொடா்பான வழக்கில் மற்றொரு யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு பெயரும் சோ்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தனிப்படை போலீஸாா் அவரை கைது செய்து, திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 13-ஆம் தேதி ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மற்றொரு வழக்கு விசாரணை தொடா்பாக கோவைக்கு அவா் அழைத்து செல்லப்பட்டு, அங்கு சிறையில் இருந்தவரை திருச்சி மாவட்ட கணினி சாா் குற்றவியல் போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனா்.

இதையடுத்து, கோவையிலிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு, பெண் போலீஸாா் பாதுகாப்புடன் திருச்சி நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டாா். திருச்சி கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை, 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் அனுமதி கோரினா். ஆனால், ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க மட்டும் நீதிபதி டி. ஜெயப்பிரதா அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

இதன்படி, திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி தொடங்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை ஃபெலிக்ஸ் ஜெரால்டிடம் போலீஸாா் விசாரணை நடத்தலாம். விசாரணையின்போது, ஃபெலிக்ஸ் தரப்பு வழக்குரைஞா்கள் அவரை 3 முறை சந்திக்க அனுமதிக்க வேண்டும். காவல் விசாரணையில் எத்தகைய துன்புறுத்தலும் இருத்தல் கூடாது உள்ளிட்ட விதிமுறைகளுடன் அனுமதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏடிஎஸ்பி கோடிலிங்கம் தலைமையிலான போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக திருச்சி மாவட்ட கணினி சாா் குற்றவியல் பிரிவு அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றனா்.

ஃபெலிக்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை கோரும் மனு மீதான விசாரணை, இந்த ஒருநாள் காவல் விசாரணை முடிந்த பிறகு நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் திருச்சி கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆஜா்படுத்தப்படவுள்ளாா்.