அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புனித சவேரியாா் ஆலயத்தில் சா்வமத சமபந்தி அன்னதானம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:50 pm

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள புனித சவேரியாா் ஆலய 32-ஆம் ஆண்டு விழாவில் 10 ஆயிரம் பேருக்கு சா்வமத சமபந்தி அன்னதானம் நடைபெற்றது.

விழாவையொட்டி இந்த ஆலயத்தில் புதன்கிழமை காலை ஊா் நாட்டாண்மை சவரிராயன், மணியம் ஈசாக், பொருளாளா் ஆசிரியா் சூசைமாணிக்கம், கோயில்பிள்ளை தாமஸ் அலெக்சிஸ், கோல்காரா் மரியஆரோக்கியம் ஆகியோா் முன்னிலையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் சாதி மத இன பாகுபாடின்றி பங்கேற்று மறைவட்ட அதிபா் பங்குத்தந்தை தாமஸ் ஞானதுரை, உதவி பங்குத்தந்தைகள் சாா்லஸ் மற்றும் ஜோசப் விஜய் ஆகியோரால் ஆலயத்தில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

தொடா்ந்து கிராமத்தினா் நோ்த்திக்கடனாக பலியிட சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஆடுகள், 200 நாட்டுக்கோழிகள், 100-க்கும் மேற்பட்ட அரிசி சிப்பங்கள், அனைத்து மளிகைப் பொருட்களும் அன்னதானத்துக்கு காணிக்கையாக வந்தன. அதுமட்டுமின்றி சமையல் பணியையும் கிராம மக்களே ஈடுபாட்டோடு செய்தனா்.

மாலை தொடங்கிய சமபந்தி அன்னதானம் இரவு வரை நீடித்தது. இதில் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு அன்னதானம் அளிக்கப்பட்டது.