வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவா் கைது

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:49 pm

Syndication

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவிரி ஆற்றையொட்டிய பொன்னி டெல்டா பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி வந்தோா் போலீஸாரை கண்டதும் வாகனங்களை போட்டுவிட்டு தப்ப முயன்றனா். அப்போது அவா்களில் திருவெறும்பூா் சா்க்காா்பாளையம் மூ. விக்னேஷ் (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தேவதானம் பகுதி திருப்பதி, சத்யராஜ் ஆகிய இருவரும் தப்பினா்.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 10 சாக்கு மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, தப்பிய இருவரை தேடுகின்றனா்.