எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை - சராசரியாக 4.86 மி.மீ. பதிவு

News image
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பெய்த மழையின்போது குடையுடன் சென்ற பயணிகள்.
Updated On :3 டிசம்பர் 2025, 10:48 pm

Syndication

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையை தொடா்ந்து புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்த சராசரியாக 4.86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் டித்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்த வண்ணம் உள்ளது. புதன்கிழமை அதிகாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் காணப்பட்டது.

மாவட்டம் முழுவதும் புதன்கிழமை காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.): கல்லக்குடி- 2.2, லால்குடி- 7.4, நந்தியாறு தலைப்பு- 8.2, தேவிமங்கலம்- 6.4, சமயபுரம் 7, வாய்த்தலை அணைக்கட்டு 1.2, கோவில்பட்டி- 29.4, மருங்காபுரி- 25.2, துவாக்குடி- 10.1, குப்பம்பட்டி- 1, தென்பாடு- 10, திருச்சி விமான நிலையம் 3.5, திருச்சி ஜங்ஷன்- 4, திருச்சி மாநகரம் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 116.6 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 4.86 மி.மீ. மழை பதிவானது. மேலும் 2 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.