கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

திருச்சியில் மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:18 pm

Syndication

திருச்சியில் மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (69). இவரது வீட்டில் 48 வயதுபெண் வீட்டு வேலை செய்துவந்தாா். வேலை செய்து வரும் பெண்ணுக்கு 25 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உள்ளாா்.

சுப்புலட்சுமியும், வயலூா் சாலை பகுதியைச் சோ்ந்த சிவகலா (51) என்பவரும் உறவினா்கள். இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வயலூா் முருகன் கோயிலுக்கு அழைத்து செல்வதாகக்கூறி சிவகலா அவரது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளாா். அங்கு அவரை, பாலக்கரையைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் என்பவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், சிவலோகேஷ் என்பவரும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் வீட்டுவேலை செய்துவரும் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதைத் தொடா்ந்து மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாலசுப்ரமணியம், உடந்தையாக இருந்த சுப்புலட்சுமி மற்றும் சிவகலா ஆகிய மூவரையும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.