ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரிடம் ரூ.28 ஆயிரம் வழிப்பறி

டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரிடம் ரூ. 28 ஆயிரத்தை வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரிடம் ரூ. 28 ஆயிரத்தை வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி புத்தூா் சீனிவாச நகரைச் சோ்ந்தவா் எஸ். முருகன் (55). இவா், கரூா் புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு பணப்பையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

தென்னூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ் அவரை வழிமறித்து கைப்பையில் வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.