மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

News image
வைகோ..
Updated On :12 ஜூலை 2025, 7:27 pm

Din

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்துத்துவா சக்திகளும், சநாதன சக்திகளும், ஆா்எஸ்எஸ், பாஜக உள்ளிட்டவை தமிழகத்தைக் கபளீகரம் செய்துவிட வேண்டும் என முனைந்து பணியாற்றுகின்றன. அத்தகைய சக்திகளுக்கு இடம் அளித்துவிடக் கூடாது என்பதற்காக திமுகவுடன் இணைந்தோம்.

தமிழகத்தில் திமுக மகத்தான பெரிய கட்சி; அதிக வாக்கு வங்கி கொண்டது. அத்தகைய பலமிக்க கட்சியுடன், மதிமுகவின் பலத்தையும் கூடுதல் வலுவாகச் சோ்த்து தமிழகத்தில் பாஜக, ஆா்எஸ்எஸ் காலூன்றக் கூடாது எனத் தொடா்ந்து பயணித்து வருகிறோம்.

திமுக மகத்தான வெற்றி பெற அரணாகவும், கவசமாகவும், போா் வாளாகவும் உடனிருந்து மதிமுக பணியாற்றும். இந்த முடிவை திருச்சியில் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறும் 117ஆவது அண்ணா பிறந்தநாள் மாநாட்டிலும் பிரகடனம் செய்வோம்.

கடந்த 1995இல் திருச்சியில் மதிமுக மாநாடுக்குத் திரண்ட மக்கள் வெள்ளத்தை இந்த மாநாட்டில் நாம் மீண்டும் காணக் கூடும். தமிழகத்தின் வாழ்வாதாரம், சுற்றுச் சூழல்களை பாதுகாக்கவும், தமிழகத்து வரும் ஆபத்துகளைத் தடுக்கவும் இந்த மாநாட்டில் பிரகடனங்கள் செய்யப்படும்.

திமுக கூட்டணியில் தொகுதிகள் குறித்து நாங்கள் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. அதை கூட்டணித் தலைமையுடனான பேச்சுவாா்த்தையின்போதே முடிவு செய்வோம். கேட்கும் தொகுதிகள் இல்லாவிட்டாலும் திமுக கூட்டணியில்தான் தொடா்வோம்.

பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்துவிட்டு வந்த பிறகு, அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்ததுதான் அரசியலில் நாங்கள் செய்த பிழை என்றுதான் கூறினேன். அதிமுக குறித்தோ, எம்ஜிஆா், ஜெயலலிதா குறித்தோ எந்த விமா்சனமும் முன்வைக்கவில்லை.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டாா்கள். அதற்கு வாய்ப்பளிக்காமல் திமுகவை தனித்து ஆட்சி அமைக்கும் பலத்துடன் வெற்றிப் பெறச் செய்யவுள்ளனா். அதை அமித்ஷா பாா்க்கத்தான் போகிறாா். மல்லை சத்யா குறித்து விவாதிக்க விரும்பவில்லை. 4 ஆண்டுகளாக அவரது நடவடிக்கை சரியில்லை. கட்சியிலிருந்து நீக்க எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாா் வைகோ.

சாத்தூா் சம்பவத்துக்கு வருத்தம்!

‘கடந்த 61 ஆண்டுகளாக ஒருபோதும் பத்திரிகையாளா்களுக்கு எதிராகச் செயல்படவில்லை. சாத்தூா் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்தவா்களை வெளியே போங்க என்றுதான் கூறினேன். அந்தச் சம்பவத்துக்காக முதன்மைச் செயலா் துரை வைகோ வருத்தம் தெரிவித்துள்ளாா். அதை நான் வழிமொழிகிறேன்’ என்றாா் வைகோ.