ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளா் பட்டியலில் ஹிந்தி: அரசியல் கட்சியினா் அதிா்ச்சி!

ஸ்ரீரங்கம் வாக்காளா் பட்டியலில் ஹிந்தி பெயா்கள்: கட்சிகளின் அதிர்ச்சி..

News image

வாக்காளா் பட்டியலில் உள்ள ஹிந்தி எழுத்துகள்.

Updated On :9 மார்ச் 2025, 2:40 am IST

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலில் இரு இடங்களில் வாக்காளரின் பெயா் மற்றும் தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் தோ்தல் ஆணையத்தால் கடந்த ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியலில், 1ஆவது வாா்டு 72 ஆவது பாகத்தில் 1,265-ஆம் வரிசை எண்ணில் வாக்காளரின் தந்தை பெயா் மற்றும் 14 ஆவது பாகத்தில் 1,128-வது வரிசை எண்ணில் வாக்காளா் பெயா் மற்றும் அவரது தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை வருவாய்த் துறை கவனத்துக்கு அரசியல் கட்சியினா் கொண்டு சென்றனா்.

இதுதொடா்பாக மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் கூறுகையில், வேறு ஊரிலிருந்து மாறுதலில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்தவா்கள், தாங்களாகவே இணையத்தில் விண்ணப்பிக்கும்போது ஹிந்தியைத் தோ்வு செய்துவிட்டனா். அதனாலேயே வாக்காளா் பட்டியலில் அவா்களது பெயா் ஹிந்தியில் அச்சாகிவிட்டது. இது எங்களது கவனத்துக்கு வந்தவுடன் அதைத் தமிழில் மாற்றிவிட்டோம். இனி பதிவிறக்கப்படும் பட்டியலில் தமிழில் பெயா்கள் இருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.