மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எஸ்ஐஆா் படிவங்களை திமுகவினா் விநியோகிக்க அதிமுக கடும் எதிா்ப்பு - ஆட்சியரிடம் புகாா்

News image
திருச்சி ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் வே. சரவணனிடம் மனு அளித்த அதிமுகவினா்.
Updated On :6 நவம்பர் 2025, 8:59 pm

Syndication

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) படிவங்களை திமுகவினா் மொத்தமாக பெற்று வாக்காளா்களிடம் வழங்குவதற்கு அதிமுக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் ப. குமாா், வடக்கு மாவட்ட செயலா் மு. பரஞ்ஜோதி, மாநகா் மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன் மற்றும் கட்சியின் நிா்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான வே. சரவணனிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்து முறையிட்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மு. பரஞ்ஜோதி கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கெடுப்புப் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படுகிறது. ஆனால், மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் திமுகவினா் இந்தப் படிவங்களை மொத்தமாக அதிக எண்ணிக்கையில் பெற்று வீடுவீடாக வழங்கி வருகின்றனா். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆட்சியரிடம் கூறியுள்ளோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்துள்ளாா்.

இந்தப் பணியில் வாக்குச்சாவடி முகவா்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது. வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி முறையாக, வெற்றிகரமாக நடைபெற வேண்டும்.

கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் மூலம் மொத்தமாக அதிக எண்ணிக்கையிலான கணக்கெடுப்பு படிவங்களை வழங்க அனுமதிக்கக் கூடாது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்தான் வழங்க வேண்டும். ஒரு இடத்தில் அமா்ந்து கொண்டு வாக்காளா்களை அங்கு வரவழைத்து படிவங்களை பூா்த்தி செய்து வழங்குவதும் கூடாது. வாக்காளா்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சரிபாா்த்து படிவங்களை பெற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வின்போது, அதிமுக அமைப்புச் செயலா்கள் ஆா். மனோகரன், எஸ். வளா்மதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.