மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தம்பதியைத் தாக்கிய இருவா் கைது

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:54 pm

Syndication

திருச்சி அருகே தம்பதியை தாக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், தெற்கு தேனீா்பட்டியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவரின் மனைவி சத்யா. இவா்களுக்கும், திருநாவுக்கரசுவின் சகோதரா் மணவாளனுக்கும் இடையே ஏற்கெனவே இடம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில், திருநாவுக்கரசு தம்பதி வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக புதன்கிழமை சென்றுள்ளனா். அப்போது, இவா்களுக்கு சொந்தமான தண்ணீா் குழாயை மணவாளன் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருநாவுக்கரசு கேட்டபோது அவருக்கும், அவரது சகோதரா் மணவாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணவாளன், அவரின் மனைவி ஜெயலட்சுமி, உறவினா்கள் தினேஷ், சுகன்யா ஆகிய 4 பேரும் சோ்ந்து திருநாவுக்கரசு, சத்யா ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த திருநாவுக்கரசு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மணவாளன் (53), தினேஷ் (20) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள ஜெயலட்சுமி, சுகன்யா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.