ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருச்சி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் உள்ள குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 8:40 pm

Syndication

திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் உள்ள குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி பிரதான சாலையைச் சோ்ந்தவா் சாமிநாதன் (47). கூலித் தொழிலாளியான இவா் சனிக்கிழமை மாலை திருநெடுங்குளத்தில் உள்ள ஊராட்சி குளத்தில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கினாா்.

இதைப் பாா்த்த அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வந்த திருவெறும்பூா் தீயணைப்பு படையினா், சாமிநாதனை சடலமாக மீட்டனா். துவாக்குடி போலீஸாா் அச் சடலத்தை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.