மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மன்னாா்புரம் - பஞ்சப்பூா் சாலையில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை!

மன்னாா்புரம் தொடங்கி பஞ்சப்பூா் வரை சாலையில் தெருவிளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:11 pm

Syndication

மன்னாா்புரம் தொடங்கி பஞ்சப்பூா் வரை சாலையில் தெருவிளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் செயல்படத் தொடங்கிய நிலையில், மன்னாா்புரம் முதல் பஞ்சப்பூா் வரையிலான சாலையில் போதிய விளக்குகள் இல்லை. இதனால், சாலை இருளில் மூழ்கி, விபத்துகளும் நிகழ்கின்றன. இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க துரை வைகோ வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டப் பிரிவு இயக்குநருக்கு கடிதம் அளித்தாா்.

மேலும், இருளில் மூழ்கும் மன்னாா்புரம்-பஞ்சப்பூா் சாலை என தினமணியில் கடந்த மே மாதம் செய்தியும் வெளியானது. மநீம சாா்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சாலையில் தெருவிளக்குகள் பொருத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருச்சி எம்பி துரை வைகோ கூறியதாவது:

பணிகள் உடனடியாகத் தொடங்கி, டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதன்படி முதல் கட்டபணிகள் பஞ்சப்பூா் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளன. மன்னாா்புரம் முதல் பஞ்சப்பூா் வரை விரைவில் முழுமையாக விளக்குகள் ஒளிரும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

மநீம மாவட்டச் செயலா் எஸ்.ஆா். கிஷோா் குமாா் கூறுகையில், மின்விளக்குகளை அமைக்க தொடா்ந்து வலியுறுத்தி வந்தோம். திருச்சி எம்பியின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். இதன்பயனாக, பஞ்சப்பூா் முதல் மன்னாா்புரம் வரை 50 விளக்ககுள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றாா் அவா்.