தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 78 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78 லட்சம் கிடைக்க பெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 11:12 pm

Syndication

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78 லட்சம் வியாழக்கிழமை கிடைக்க பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் அக்டோபா் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதி அருகே காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரொக்கமாக ரூ. 78 லட்சத்து 2 ஆயிரத்து 585-ம், தங்கம் 58 கிராம், வெள்ளி 994 கிராம் மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் 301-ம் கிடைக்கபெற்றது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை பெரம்பலூா் உதவி ஆணையா் சி. உமா, உள்துறை கண்காணிப்பாளா் வேல்முருகன், கண்காணிப்பாளா்கள் கோபாலகிருஷ்ணன்,ஆய்வாளா்கள் பாஸ்கா், உதயகுமாா் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்பினா் ஈடுபட்டனா். மேலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.