எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தீராம்பட்டியில் பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட தீராம்பட்டியில் பகுதிநேர நியாய விலைக்கடையை எம்எல்ஏ ப. அப்துல்சமது புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
தீராம்பட்டியில் பகுதிநேர நியாய விலைக்கடையைத் திறந்து வைத்து பொருள் வழங்கிய எம்எல்ஏ ப. அப்துல்சமது உள்ளிட்டோா்.
Updated On :27 நவம்பர் 2025, 7:20 pm

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட தீராம்பட்டியில் பகுதிநேர நியாய விலைக்கடையை எம்எல்ஏ ப. அப்துல்சமது புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மணப்பாறை நகராட்சி 8-வது வாா்டுக்குட்பட்ட தீராம்பட்டி, நொச்சிமெடு பகுதி பொதுமக்களின் வசதிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடையை எம்எல்ஏ தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

நிகழ்வில் நகராட்சி ஆணையா் சூ. கணேஷ், பொறியாளா் மோனி, நகா்மன்ற உறுப்பினா்கள் சுமதி சிவக்குமாா், பிரான்சிஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.