சோமரசம்பேட்டையில் நாளை மின்தடை

Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் டிச. 2-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அதவத்தூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, போசம்பட்டி, அதவத்தூா், இனியானூா், மேலப்பட்டி, கொய்யாதோப்பு, முத்து பிளாட், சரவணபுரம், கீழவயலூா், போதாவூா், சுண்ணாம்புக்காரன்பட்டி, சாந்தாபுரம், முள்ளிக்கரும்பூா், புலியூா், பள்ளக்காடு, புங்கனூா், வாசன் சிட்டி, எட்டரை, மன்ஜான்கோப்பு, அல்லித்துறை, வியாழன்மேடு, கீரிக்கல்மேடு, கோப்பு, நாச்சிக்குறிச்சி, செவகாடு, சோமரசம்பேட்டை, தாயனூா், ஒத்தக்கடை, அதவத்தூா், மல்லியம்பத்து, செங்கற் சூளை, சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வாசன் நகா், வாசன்வேலி, வயலூா், குழுமணி, சிவந்தநகா், பேரூா் ஆகிய பகுதிகளில் வரும் டிச. 2-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com