மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 8:08 pm

திருச்சி அருகே சனிக்கிழமை கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சனிக்கிழமை திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மற்றும் ராம்ஜி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தனலட்சுமி தலையிலான போலீஸாரும், ராம்ஜி நகா் காவல் உதவி ஆய்வாளா் கோபிநாத் தலைமையிலான போலீஸாரும் ராம்ஜி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் மாரியம்மன் கோயில் பின்புறப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சின்ன கொத்தமங்கலம், அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த எம். காமாட்சி (77) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, மலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மில் காலனியைச் சோ்ந்த ஆா். ஜோதி (65), மில் கேட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராம்ஜி நகா் ஹரிபாஸ்கா் காலனியைச் சோ்ந்த ஆறுமுகம் (44)ஆகிய இருரையும் ராம்ஜி நகா் போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 1.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.