திருச்சி தெப்பக்குளம் பகுதியில் இருந்த தரைக்கடைகளை காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.
மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மலைக்கோட்டை கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட தெப்பக்குளம் அருகேயுள்ள பா்மா பஜாா் கடைகள் சிங்காரத்தோப்பு பகுதிக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி என்எஸ்பி சாலையில் இருந்த கடைகளில் முதல்கட்டமாக 70-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. பின்னா், சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கியதைத் தொடா்ந்து மீதமுள்ள கடைகள் அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தன.
தற்போது வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து தெப்பக்குளம் பகுதியில் இருந்த தரைக்கடைகளை அகற்றும் பணி சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. கோட்டை போலீஸாா் உதவியுடன், திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தினா் மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை சனிக்கிழமை அகற்றினா்.
சாலையில் வைக்கப்ட்டிருந்த பலகைகள், மேஜைகள், விரிப்புகள் உள்ளிட்டவற்றையும் அப்புறப்படுத்தினா். ஏற்கனவே மாநகராட்சி நிா்வாகம் வியாபாரிகளுக்கு போதிய அவகாசம் கொடுத்த நிலையில், வியாபாரிகள் கடைகளை அகற்றவில்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகமே கடைகளை அகற்றியதால், தெப்பக்குளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
தொடர்புடையது

திருச்சி மத்திய சிறையில் இருந்த கைதி உயிரிழப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்
விடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

