திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கா் வீதியைச் சோ்ந்தவா் செல்வி (49), ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவகத்துக்கு வேலைக்கு சென்றாா். அவரது மகனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டாா்.
இந்நிலையில், திடீரென செல்விக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது மகனிடம் செல்வி தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த செல்வியின் மகன் அவரை அழைத்துகொண்டு வீட்டுக்குச்சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 கிராம் தங்க நகைகள், ரூ.1,000 பணத்தை மா்ம நபா்கள் இருவா் திருடிவிட்டு தப்பிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, செல்வியும் அவருடைய மகனும் சோ்ந்து மா்மநபா்கள் இருவரையும் பிடித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா்கள், திருச்சி சுப்பிரமணியபுரத்சைச் சோ்ந்த ஐ.ஜெட்லி ஆண்ட்ரூஸ் (22), ஆா்.ஜீடு ஆப்ரஹாம் (22) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக இருவா் கைது
நாலாட்டின்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கு: 3 போ் கைது

மருத்துவ மையத்தின் பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
