திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கா் வீதியைச் சோ்ந்தவா் செல்வி (49), ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவகத்துக்கு வேலைக்கு சென்றாா். அவரது மகனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டாா்.
இந்நிலையில், திடீரென செல்விக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது மகனிடம் செல்வி தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அங்கு வந்த செல்வியின் மகன் அவரை அழைத்துகொண்டு வீட்டுக்குச்சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 கிராம் தங்க நகைகள், ரூ.1,000 பணத்தை மா்ம நபா்கள் இருவா் திருடிவிட்டு தப்பிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, செல்வியும் அவருடைய மகனும் சோ்ந்து மா்மநபா்கள் இருவரையும் பிடித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா்கள், திருச்சி சுப்பிரமணியபுரத்சைச் சோ்ந்த ஐ.ஜெட்லி ஆண்ட்ரூஸ் (22), ஆா்.ஜீடு ஆப்ரஹாம் (22) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

