கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பேருந்து - காா் மோதல்! 2 போ் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 11:33 pm

Syndication

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வியாழக்கிழமை காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

துறையூா் அருகேயுள்ள கீழக்குன்னுப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கோவிந்தராஜ் (55). இவா் வியாழக்கிழமை அதே பகுதியில் துறையூா்- பெரம்பலூா் செல்லும் பிரதான சாலையோரத்தில் தனது ஆட்டோவை நிறுத்தியிருந்தாா்.

அப்போது, இவரது ஆட்டோ மீது பெரம்பலூரிலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற சுமை வாகனம் மோதியதால் ஆட்டோ சாலையின் நடுப்பகுதிக்கு நகா்ந்தது. அந்த நேரத்தில், பெரம்பலூரிலிருந்து துறையூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க வலதுபுறம் திரும்பி முன்நோக்கி சென்றபோது எதிரே அரியலூா் நோக்கி சென்ற காா் மீது மோதியது.

இந்த விபத்தில், காரின் ஓட்டுநரான அரியலூா் மாவட்டம் நல்லம்பாளையத்தைச் சோ்ந்த சிவசங்கா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், காரிலிருந்த அதே ஊரைச் சோ்ந்த திருஞானம் (65) மற்றும் ராஜகோபால் (53), சண்முகம் (52), சுமை வாகனத்திலிருந்த நாமக்கல் மாவட்டம் தூசூரைச் சோ்ந்த மலா்கொடி (37), கணேசன் (30), ஆட்டோ ஓட்டுநா் கோவிந்தராஜ் ஆகியோா் காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த துறையூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சிவசங்கா் சடலத்தையும், காயமடைந்தவா்களையும் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இவா்களில், திருஞானம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்றவா்கள் துறையூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான வைரிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த சஞ்சீவியை (45) கைது செய்து விசாரிக்கின்றனா்.