திருச்சி
மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் 1,12,039 அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சா் தொடங்கி வைத்தாா்
மணப்பாறை காவல்காரன்பட்டி சமத்துவபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணியை
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினா் ராஜாத்தி (எ) கவிஞா் சல்மா, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இதில் மணப்பாறையில் உள்ள 118 ரேஷன் கடைகள் மூலம் 73392 குடும்ப அட்டைதாரா்களும், மருங்காபுரியில் உள்ள 73 ரேஷன் கடைகள் மூலம் 38647 குடும்ப அட்டைதாரா்களும் பயனடைவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

