பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருச்சியில் பரவலாக மழை

News image
திருச்சி பால்பண்ணை டிமாா்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை மழையில் நனைந்து சென்ற வாகன ஓட்டிகள்.
Updated On :11 ஜனவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலமாக மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் தாழ்வழுத்த மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வருகிறது. மேலும், ஒரு சில நாள் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மழை பெய்தது. விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.

ஏற்கெனவே, பனியினால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் மழையால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.