கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திருச்சியில் பரவலாக மழை

News image
திருச்சி பால்பண்ணை டிமாா்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை மழையில் நனைந்து சென்ற வாகன ஓட்டிகள்.
Updated On :11 ஜனவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலமாக மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் தாழ்வழுத்த மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வருகிறது. மேலும், ஒரு சில நாள் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மழை பெய்தது. விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.

ஏற்கெனவே, பனியினால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் மழையால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.