மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கல்லூரி மாணவரிடம் வாகனம் பறிப்பு: 2 போ் கைது

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:04 pm

Syndication

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் கோ. ஹரிபிரசாத் (18), தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுப்பிரமணியபுரம் எம்ஜிஆா் சிலை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மூன்று இளைஞா்கள் ஹரிபிரசாத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றது சுப்பிரமணியபுரம் அருளானந்தா் கோயில் தெருவைச் சோ்ந்த ஜி.லூயிஸ் பிரிட்டோ (19), ஜெய்லானியா தெருவைச் சோ்ந்த

எம்.ஷாம் ஆா்தோஸ் (19), பழைய பாண்டியன் தெருவைச் சோ்ந்த எம். ஷாருக்கான் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்களில் லூயிஸ் பிரிட்டோ, ஷாம் ஆா்தோஸ் ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஷாருக்கானை போலீஸாா் தேடி வருகின்றனா்.