திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

திருவெறும்பூா் அருகே பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 16-ஆம் தேதி நடத்தப்பட உள்ளநிலையில் முதல் பரிசாக காா்

News image
திருச்சி பெரிய சூரியூா் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றுவந்த முன்னேற்பாடு பணிகள்.
Updated On :13 ஜனவரி 2026, 1:47 am

Syndication

திருச்சி: திருவெறும்பூா் அருகே பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 16-ஆம் தேதி நடத்தப்பட உள்ளநிலையில் முதல் பரிசாக காா் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத் திறப்புவிழாவை முன்னிட்டு தீவிர முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

திருவெறும்பூா் அருகே பெரிய சூரியூரில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டுப் போட்டி திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். கிராமத் திடலில் போட்டி நடத்தப்பட்டு வந்த நிலையில், ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் ஊா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனடிப்படையில், ரூ. 3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு, இதனை தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 15-ஆம் தேதி பொங்கலன்று திறந்து வைக்க உள்ளாா். இந்த மைதாதனத்தில் வரும் 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து பெரிய சூரியூா் கிராமக் குழுவினா் கூறுகையில், புதிய மைதானத்தில் களமிறங்க காளைகளும், மாடுபிடி வீரா்களும் உற்சாகமாக உள்ளனா். நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறும் வீரருக்கு முதன்முறையாக முதல் பரிசாக காா், இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும். களம் காணும் அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, சேலை பரிசாக வழங்கப்படும் என்றனா்.