திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன. 15) திறந்து வைத்தார்.
பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய திடலில் நடைபெறவுள்ளது.
இத்திடல் தொடக்க விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , “திருச்சிக்கு மலைக்கோட்டை எப்படி ஒரு அடையாளமோ, காவிரி ஆறு ஒரு அடையாளமோ, அதேபோல, சூரியூர் ஜல்லிக்கட்டும் திருச்சிக்கு ஒரு அடையாளம்! இந்த மைதானத்தைப் பார்க்கும்போது, சூரியூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறதோ அதே பெருமையை நானும் அடைகிறேன்.
இந்த ஜல்லிக்கட்டு முதலில் ஊர்த்தெருக்களில் நடைபெற்றது. அதன்பின், ஊர் மந்தைகளில் நடைபெற்றது, அதன்பின், வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பின் படிப்படியாக வளர்ந்து, இந்த ஆண்டு, சூரியூரில் ஜல்லிக்கட்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள இந்த நிரந்தர அரங்கத்தில் நாளை (ஜன. 16) நடைபெறும் என்பது மகிழ்ச்சியான செய்தியாக அமைகிறது” என்றார். ஜல்லிக்கட்டு அரங்கம் தொடக்க விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கே. என். நேரு உடனிருந்தனர்.
Summary
The Jallikattu arena in Suriyur, Trichy, was inaugurated by Deputy Chief Minister Udhayanidhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் ரூ. 6.54 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு
ரூ.2.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நீச்சல் குளம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா திறந்து வைத்தாா்

கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.4.75 கோடியில் மாணவியா் விடுதி திறப்பு







