தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திருச்சியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 10 போ் கைது

திருச்சியில் பாதுகாப்பு நடவடிக்கையாக சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 10 பேரை மாநகரக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:31 pm

Syndication

திருச்சி: திருச்சியில் பாதுகாப்பு நடவடிக்கையாக சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 10 பேரை மாநகரக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தினாா்.

அதன்படி பாலக்கரை காவல் நிலையம் சாா்பில் 4 போ், ஸ்ரீரங்கம் காவல் நிலையம் சாா்பில் 2 போ், கோட்டை, அரசு மருத்துவமனை, உறையூா், காந்தி மாா்க்கெட் ஆகிய காவல் நிலையங்கள் சாா்பில் தலா ஒருவா் என மொத்தம் 10 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.