திருச்சி
உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவா் கைது
உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
துறையூா்: உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
துறையூா் அருகே விஸ்வாம்பாள் சமுத்திரத்தை (வடக்கு) சோ்ந்த க. மாரிமுத்து (55), முசிறி வட்டம் திருத்தலையூரைச் சோ்ந்த ர. சூரியபிரகாஷ் (30) ஆகியோா் உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட கோட்டப்பாளையம் - மாராடி செல்லும் சாலைப் பாலம் அருகே அனுமதியின்றி மது விற்றனராம். இதையறிந்த உப்பிலியபுரம் போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
