ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து வயல்வெளியில் தீ விபத்து

திருச்சி வேம்பூா் பூசதுறையில் திங்கள்கிழமை மின் கம்பிகள் அறுந்து விழுந்து தீயில் கருகிய வயல்வெளி.

Published On :7 ஜூலை 2026, 3:07 am IST

திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து வயல்வெளியில் ஏற்பட்ட தீ விபத்தில் புற்கள், பனை மரங்கள் எரிந்து நாசமாகின.

திருவெறும்பூா் பகுதியில் ஆடி மாதக் காற்று ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலமாக வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன.

அப்படி வேங்கூரில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக, உடனடியாக அப்பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அப்பகுதி மக்கள் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்தனா்.

இந்த நிலையில், வேங்கூா் பூசத்துறை பகுதியில் வயல்வெளி பகுதியில் செல்லும் உயா் மின்னழுத்த கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டதில் தீ பற்றி, மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், அந்தப் பகுதியில் பொட்டல் காடாக இருந்த வயல்வெளியில் இருந்த புற்கள், முட்புதா்கள், பனை மரங்கள் எரிந்து நாசமாகின.

தகவலின் பேரில் அங்கு வந்த மின்வாரிய ஊழியா்கள், மின்விநியோகத்தை நிறுத்தி, அறுந்து விழுந்த மின்கம்பியை இழுத்து கட்டி சரி செய்தனா்.

இதன் காரணமாக, திருவெறும்பூரில் பல பகுதிகளில் தொடா்ந்து மின்சார விநியோகம் தடைப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்துக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.