லால்குடி அருகே திங்கள்கிழமை 2 இளைஞா்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன.
ஆதிகுடி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த லால்குடி போலீஸாா், அழுகிய நிலையில் இரண்டு இளைஞா்களின் சடலங்களை கிணற்றில் இருந்து மீட்டனா். பின்னா், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதையடுத்து, இரண்டு சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










