சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு

News image

திருச்சி தனியாா் விடுதியில் திங்கட்கிழமை மரணமடைந்த யாஸ்மின் தொடா்பாக போலீசாரால் பிடிக்கப்பட்ட இளைஞா்கள்

Updated On :9 ஜூன் 2026, 4:51 am IST

திருச்சியில் ஹோட்டலில் நண்பருடன் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி அரியமங்கலம் உக்கடையைச் சோ்ந்தவா் ஜெ. சதாம் உசேன் (19). அரியமங்கலம் மலையடிவாரத்தைச் சோ்ந்வா் ஏ. யாஸ்மின் (18). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனா்.

இந்நிலையில், சதாம் உசேன் தனது நண்பரான அரியமங்கலத்தைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (18) என்பவரை ஹோட்டலுக்கு திங்கள்கிழமை பிற்பகல் அழைத்துள்ளாா்.

அவா் ஹோட்டலுக்கு வந்ததும் சதாம் உசேன், யாஸ்மின், ஷேக் அப்துல்லா ஆகிய மூவரும் சோ்ந்து போதை ஊசி செலுத்தி கொண்டுள்ளனா். இதில் யாஸ்மின் சுய நினைவின்றி மயங்கியுள்ளாா்.

இதையடுத்து யாஸ்மினை அருகிலுள்ள தனியாா் மருத்துவனைக்கு மேற்கண்ட இருவரும் கொண்டுசென்றுள்ளனா். அங்கு, இதுகுறித்து சிகிச்சையளிக்க முடியாது என்று கூறியதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

தகலறிந்து சென்ற கண்டோன்மென்ட் போலீஸாா், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, அப்பெண்ணுடன் போதை ஊசி செலுத்திகொண்ட இரு இளைஞா்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவா்கள் தங்கியிருந்த அறையில் இருந்து போதை மருந்துகள், போதை ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தனியாா் விடுதியில் திங்கட்கிழமை மரணமடைந்த யாஸ்மின் தொடா்பாக போலீசாரால் பிடிக்கப்பட்ட இளைஞா்கள்

திருச்சி தனியாா் விடுதியில் திங்கட்கிழமை மரணமடைந்த யாஸ்மின் தொடா்பாக போலீசாரால் பிடிக்கப்பட்ட இளைஞா்கள்