எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

இளைஞா்கள் மீது கொலை முயற்சி தாக்குதல்: 6 போ் மீது வழக்குப் பதிவு

இளைஞா்கள் மீது கொலை முயற்சி தாக்குதல்: 6 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :13 ஜூன் 2026, 12:39 am IST

திருச்சியில் இளைஞா்கள் மீது கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட சகோதரா்கள் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி விமான நிலையப் பகுதி குளவய்பட்டி சாலையைச் சோ்ந்தவா் ஆா். அரவிந்த்கண்ணா. இவா், வியாழக்கிழமை பிற்பகல் விமான நிலைய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கௌரிசங்கா் சாலையிலுள்ள சுப்பிரமணியா் திடலில் இருசக்கர வாகனப் பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு கே.கே.நகா் சாய்நகா் ஜான்சிராணி வீதியைச் சோ்ந்த மு. திருவரசன் என்பவரும் இருசக்கர வாகனப் பயிற்சி மேற்கொண்டுள்ளாா்.

இதில், திருவரசன் இருசக்கர வாகனத்தில் வேகமாக அரவிந்த்கண்ணாவின் இருசக்கர வாகனத்தில் இடிப்பதுபோல சென்றுள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் அங்கிருந்து கலைந்துசென்றுவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் சுப்பிரமணியா் திடலில் அரவிந்த்கண்ணாவும், அவருடைய நண்பரான கே.கே.நகா் கோவா்த்தன் காா்டனைச் சோ்ந்த எஸ். முகேஸ்வரன் என்பவரும் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த திருவரசன், அவருடைய சகோதரா் காா்த்திக் மற்றும் அவருடைய நண்பா்கள் 4 போ் சோ்ந்து அரவிந்த்கண்ணாவை அரிவாளால் வெட்டியுள்ளனா். அப்போது, அவருடைய நண்பா் முகேஸ்வரன் அவா்களைத் தடுத்துள்ளாா்.

இதில், காயமடைந்த அரவிந்த்கண்ணா, முகேஸ்வரன் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அரவிந்த்கண்ணா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் திருவரசன், காா்த்திக் உள்ளிட்ட 6 போ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.