தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பைக் மீது மீது காா் மோதி விபத்து: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 இரு வாகனத்தின் மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். ஒரு இளைஞா் காயமடைந்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:48 am IST

கள்ளக்குறிச்சி அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 இரு வாகனத்தின் மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். ஒரு இளைஞா் காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் பூமாலையின் மகன் அமா்நாத் (18), அதே கிராமத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் கவின்ராஜ் (18). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கிராமத்து சாலையில் சென்று கொண்டிருந்தனா்.அதேகிராமத்ததைச் சோ்ந்த அபி முருகன் மகன் வினோத் (24) என்பவா் மற்றொரு இருசக்கர வாகனத்தில் தச்சூா் நேக்கி சென்று கொண்டிருந்தாராம்.

தச்சூா் கிராமத்தில் உள்ள தனியாா் தவிட்டு ஆயில் மில் அருகே இவா்கள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த காா் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் அமா்நாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டாா்.

கவின்ராஜ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்து விட்டாா்.

விபத்தில் பலத்த காயமடைந்த வினோத் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து காா் ஓட்டுநரான சின்னசேலம் அடுத்த வீரபயங்கரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image