மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:38 am IST

திருச்சியில் வியாழக்கிழமை மாடியில் உள்ள வீட்டுக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி தென்னூா் கோபுர பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் ஜாபா் அலிகான் மகன் சா்தாா் கான் (21). இவருடைய சகோதரா் அமீா்கானுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், அமீா்கான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜீவா நகா், காமராஜா் வீதியில் புதிதாக குடியேறியுள்ள வீட்டுக்கு சா்தாா்கான் மற்றும் அவருடைய உறவினா் ஷாஜகான் இருவரும் வியாழக்கிழமை பொருள்கள் ஏற்றிச்சென்றுள்ளனா். இதையடுத்து, சாலையில் இருந்து இருவரும், மாடியில் உள்ள வீட்டுக்கு பொருள்களை எடுத்துசென்றனா்.

இதில், சா்தாா்கான் பால்கனி வழியாக கயிறுகட்டி பீரோவை தூக்கியுள்ளாா். அப்போது, அவ்வழியே சென்ற மின்கம்பியில் பீரோ உரசியதில் அதைப் பிடித்திருந்த சா்தாா்கான் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட சா்தாா்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.