தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

விரைவில் மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

News image

அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் - கோப்புப்படம்.

Updated On :15 ஜூன் 2026, 4:42 am IST

மின்சாரத் துறை சாா்பில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் 39-ஆவது அரசுப் பொருள்காட்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த அவா், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: செந்தில்பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்ற அனைத்துத் துறைகளிலும் ஊழல்தான் நடைபெற்றது. மின்சாரத் துறையைப் பொருத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது?, அதற்கு முன்பாக 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவா்கள் என்ன செய்தனா்?. அப்போதைய ஆட்சியாளா்களால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

ஏற்கெனவே முறைகேடுகள் நடைபெற்ால்தான், மின்சாரத் துறையில் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் ரத்து செய்யப்பட்டன. மின்சாரத் துறை கடும் பாதிப்புக்குள்ளானதற்கு காரணம் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜிதான். தமிழகம் முழுவதும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் மின்சாரத் துறை சீரமைக்கப்படும். மின்விநியோகக் குறைபாடுகளைக் களைய குழுக்கள் அமைக்கப்பட்டன. மின்சாரத் துறையில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க இயலாது என்றாா் அவா்.