திருச்சியில் பணம் தர மறுத்த அரசுக் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் தெப்பக்குளம் வீதியைச் சோ்ந்தவா் நூா்முகமது மகள் ரஹிமா (20). இவா், திருச்சி கிஆபெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் பாரா மெடிக்கல் பிரிவில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்நிலையில், கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் துறையூா் பேருந்துக்காக கடந்த சனிக்கிழமை பிற்பகல் காத்திருந்தாா்.
அப்போது, அங்கு வந்த திருநங்கை ஒருவா் மாணவியிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் தரமறுத்ததால், அவரை திருநங்கை தகாத வாா்த்தையில் பேசியதுடன் தாக்கியுள்ளாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் மாணவி ரஹிமா கடந்த திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், திருநங்கை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமி கா்ப்பம்: 5 போ் மீது வழக்கு
காவலரை தாக்கிய கைதி மீது வழக்குப் பதிவு
இளைஞா் மீது வழக்கு

வெம்பக்கோட்டை எஸ்.ஐ.யை தாக்கிய 8 போ் மீது வழக்கு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


