27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காவலரை தாக்கிய கைதி மீது வழக்குப் பதிவு

திருச்சியில் காவலரை புதன்கிழமை தாக்கிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :19 ஜூன் 2026, 4:16 am IST

திருச்சியில் காவலரை புதன்கிழமை தாக்கிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஆா். விஜய் (29). திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விஜய்யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து அவரை மத்திய சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காவலா்கள் புதன்கிழமை அழைத்து சென்றுள்ளனா்.

அப்போது, கைதி விஜய் திடீரென ஊசியை எடுத்து விழுங்க முயற்சித்துள்ளாா். இதைத் தடுக்க முயன்ற காவலா் ஆ. வேல்முருகனின் கையைக் கடித்துள்ளாா். இதில், காயமடைந்த காவலருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் காவலா் ஆ. வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.