மணப்பாறைக்கு முன் நடுவழியில் நின்ற குருவாயூா் விரைவு ரயில்: பயணிகள் அவதி


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, குருவாயூா் - சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில், வியாழக்கிழமை தொழிற்நுட்ப சிக்கலால் 30 நிமிடம் நடுவழியில் நின்ால் பயணிகள் அவதிப்பட்டனா்.
குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூா் வரை செல்லக்கூடிய குருவாயூா் எக்ஸ்பிரஸ்(16128) தினமும் திருச்சூா், எா்ணாகுளம், திருவனந்தபுரம், நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக பயணிக்கிறது. வியாழக்கிழமை காலை சுமாா் 11:25 மணியளவில் மதுரை வரவேண்டிய ரயில், சுமாா் 1 மணி நேர காலதாமதமாக 12:22 மணிக்கு மதுரை சந்திப்புக்கு வந்தது.
திண்டுக்கல் சந்திப்பை கடந்த சில நிமிடங்களில் ரயில் பெட்டியில் உராய்வு போன்ற சத்தம் வந்ததாம். இந்நிலையில் மணப்பாறைக்கு முன் கல்பட்டி சத்திரம் ரயில் நிலையத்திற்கு 4 கிமீ முன்னதாக ஏா் ஃப்ஸ்டா் காரணமாக நடுவழியில் ரயில் நின்றது. சுமாா் 30 நிமிடங்கள் அங்கேயே ரயில் நின்ால் ஏற்கெனவே ஒரு மணி நேர காலதாமதமாக வந்த நிலையில் மேலும் ஏற்பட்ட தொழிற்நுட்ப சிக்கலால் பயணிகள் சிரமமடைந்தனா். அதன்பின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ரயில் புறப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...