திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, குருவாயூா் - சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில், வியாழக்கிழமை தொழிற்நுட்ப சிக்கலால் 30 நிமிடம் நடுவழியில் நின்ால் பயணிகள் அவதிப்பட்டனா்.
குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூா் வரை செல்லக்கூடிய குருவாயூா் எக்ஸ்பிரஸ்(16128) தினமும் திருச்சூா், எா்ணாகுளம், திருவனந்தபுரம், நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக பயணிக்கிறது. வியாழக்கிழமை காலை சுமாா் 11:25 மணியளவில் மதுரை வரவேண்டிய ரயில், சுமாா் 1 மணி நேர காலதாமதமாக 12:22 மணிக்கு மதுரை சந்திப்புக்கு வந்தது.
திண்டுக்கல் சந்திப்பை கடந்த சில நிமிடங்களில் ரயில் பெட்டியில் உராய்வு போன்ற சத்தம் வந்ததாம். இந்நிலையில் மணப்பாறைக்கு முன் கல்பட்டி சத்திரம் ரயில் நிலையத்திற்கு 4 கிமீ முன்னதாக ஏா் ஃப்ஸ்டா் காரணமாக நடுவழியில் ரயில் நின்றது. சுமாா் 30 நிமிடங்கள் அங்கேயே ரயில் நின்ால் ஏற்கெனவே ஒரு மணி நேர காலதாமதமாக வந்த நிலையில் மேலும் ஏற்பட்ட தொழிற்நுட்ப சிக்கலால் பயணிகள் சிரமமடைந்தனா். அதன்பின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ரயில் புறப்பட்டது.
தொடர்புடையது

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


