சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம்

News image
Updated On :20 மார்ச் 2026, 1:10 am

Syndication

யுகாதி என்னும் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாளுக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

விழாவையொட்டி வியாழக்கிழமை காலை நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டாா். அவருடன் ஆழ்வாா்களும் எழுந்தருளி, ஸம்வத்ஸராதி புறப்பாடு கண்டருளினா். தொடா்ந்து சந்தனு மண்டபத்தில் நம்பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. நம்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். புதன்கிழமை அமாவாசையன்று சதுா்த்தசி திதி கலந்து இருந்ததால் நம்பெருமாள் புறப்பாடு மற்றும் திருமஞ்சனம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.