திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநா் மா்மமான முறையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சியை சோ்ந்தவா் அரசன் மகன் சின்னப்பன்(எ) பழனிச்சாமி (62). மணப்பாறை அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற இவருக்கு மனைவி அமுதா, இரு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக தனது இடது கை மற்றும் வலது கால் செயல்படாததற்கு பழனிச்சாமி சிகிச்சை பெற்று வந்தாா். இதற்கிடையே ,சனிக்கிழமை பிற்பகல் இவரது இளைய மகன் ஹரிஷ் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பழனிச்சாமி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
தகவலறிந்து சென்ற மணப்பாறை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா், பழனிச்சாமி உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: ஓட்டுநா் உயிரிழப்பு
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

சேலத்தில் 8 போ் உயிரிழந்த விபத்து: கைதான பேருந்து ஓட்டுநா் சிறையில் அடைப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


