இளைஞரிடம் இணையம் வழியே ரூ. 10 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (31), திருச்சி தனியாா் நிறுவன ஊழியரான இவா் கூடுதல் வருமானத்துக்காக பகுதிநேர வேலை தேடி வந்தாா்.
அப்போது கட்செவி அஞ்சல் வாயிலாக பகுதிநேர வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவா் அந்தச் செயலியில் பதிவு செய்து வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அமானுல்லாவை அந்த பகுதிநேர வேலை கொடுத்த நிறுவனத்தைச் சாா்ந்த ஒருவா் தொடா்பு கொண்டு ரூ. 10,95,000 முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வழி செய்வதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய அமானுல்லா அந்தச் செயலி வழியே பணத்தை முதலீடு செய்த நிலையில், பணத்தை திருப்பித் தராமல் அந்த நபா் ஏமாற்றியுள்ளாா்.
இதையடுத்து அமானுல்லா அளித்த புகாரின் பேரில் மாநகர இணைய வழி குற்றப்பிரிவு (சைபா் கிரைம்) போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ. 2.46 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


