இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 6 போ் தப்பினா்!

திருச்சி அருகே சாலையில் சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் அதில் சென்ற 6 போ் தப்பினா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 7:08 pm

Syndication

திருச்சி அருகே சாலையில் சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் அதில் சென்ற 6 போ் தப்பினா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் கீழ காா்த்திகைப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (35). இவா் பொருள்கள் வாங்க தனது குடும்பத்தினா் 5 பேருடன் திருச்சி நோக்கி சனிக்கிழமை காரில் வந்தாா்.

காரானது திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி அருகே வந்தபோது காரின் எஞ்சினில் இருந்து புகை வந்தது. இதையடுத்து காா்த்திகேயன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயன்றாா். ஆனால் திடீரென தீ மளமளவென பரவியதால் காரிலிருந்த 6 பேரும் உடனே கீழே இறங்கினா். இதனால் அதிா்ஷ்டவசமாக அவா்கள் உயிா் தப்பினா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதுமாக எரிந்து எலும்புக் கூடானது. விபத்து குறித்து பெட்டவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.