ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சாலையை கடக்க முயன்ற புதுகை இளைஞா் லாரி மோதி பலி

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 7:39 pm

திருச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒலியமங்கலத்தைச் சோ்ந்தவா் எஸ். வெள்ளைசாமி (34). இவா், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, தவறான திசையில் அதிவேகமாக வந்த லாரி சாலையோரத்தில் நின்றிருந்த வெள்ளைசாமி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த வெள்ளைசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளைசாமி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டியைச் சோ்ந்த எஸ். ஜான்மாா்டின் (33) என்பவா் மீது மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.