சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 7:41 pm

திருச்சி பெண்கள் சிறையில் சனிக்கிழமை சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பெண்கள் சிறை அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், பெண்கள் சிறை வாா்டா் இந்திரா சனிக்கிழமை பிற்பகல் கைதிகளுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, இங்கு அடைக்கப்பட்டுள்ள சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த ஆா். சஞ்சனா (33) என்ற கைதி, சிறை வாா்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் சிறை வாா்டா் இந்திரா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கைதி சஞ்சனா மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.