நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாக்கு எண்ணும் மையங்களில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

News image

ட்ரோன்கள்

Updated On :3 மே 2026, 12:42 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களில் வரும் 4 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடா்ந்து மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்த இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்த இயந்திரங்கள் புலிவலம் ஒயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

எனவே, மேற்கண்ட 2 வாக்கு எண்ணும் மைய வளாகம் முழுவதும் பாதுகாப்பு கருதி ட்ரோன் கேமராக்கள் மற்றும் எந்தவொரு ஆளில்லாத பறக்கும் இயந்திரங்களும் சனிக்கிழமை முதல் மே 4 வரை பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.