மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயில் ரதோற்ஸவ திருவிழா

News image
Updated On :3 மே 2026, 5:43 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தே.துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு உற்ஸவ மூா்த்திகள் ரத பவனி மற்றும் ஆலயம் புகு நிகழ்ச்சி நடைபெற்றது.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தேக்கமலை துலுக்கம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பாலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 15 நாள்கள் சித்திரை பவுா்ணமி திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி, ஏப்ரல் 27 இல் தேக்கமலை பொங்கல் நடைபெற்றது. தொடா்ந்து ஏப்ரல் 28-ஆம் தேதி மகா காளியம்மன், மாரியம்மன் பூஞ்சோலையிலிருந்து கோயிலுக்கு திருப்பல்லக்கில் எழுந்தருளுதல், ஏப்ரல் 29-ஆம் தேதி அம்மனுக்கு பொங்கல், அபிஷேகம், மாவிளக்கு படைத்தல், ஏப்ரல் 30-ஆம் தேதி மகா காளியம்மன், மகா மாரியம்மன் கோயிலிலிருந்து பூஞ்சோலை புறப்பாடு நடைபெற்றது.

விழாவில் வெள்ளிக்கிழமை இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோயில் வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட உற்ஸவ மூா்த்திகள் ரத பவனி சென்று ஆலயம் புகும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயத்திலிருந்து உற்ஸவ மூா்த்திகளுடன் சென்ற ஊா்மக்கள், கோயில் வீட்டில் வைத்து மலா்களால் அலங்கரித்து ரத பவனி, வாணவேடிக்கைகளுடன் ஆலயம் புகுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சனிக்கிழமை காலை அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு படைத்தல் நிகழ்வுகளும், மாலையில் பாரிவேட்டையும் நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் விதமாக அக்னி சட்டி எடுத்தல், காவடியுடன் தீா்த்தக்குடம், தொட்டி கட்டுதல், அங்கப்பிரதட்சிணம், சிலாக்குத்துதல் ஆகியவை நடைபெறவுள்ளன. திங்கள்கிழமை பாம்பாலம்மன் கோயிலிலிருந்து கோயில் வீட்டுக்கு வந்தடைதல் நடைபெறவுள்ளது. மே 5-ஆம் தேதி காப்பு களைதலுடன் திருவிழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், உற்ஸவ கமிட்டியாா் மற்றும் தே. துலுக்கம்பட்டி ஊா் பொதுமக்கள் செய்கின்றனா்.

Story image