40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருச்சியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற மூவா் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 1:17 am IST

திருச்சியில் தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்ற மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களையும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவா்களையும் குறிவைத்து கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பதைத் தடுக்கும் விதமாக மாவட்ட, மாநகரக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்மலைப்பட்டி தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் வெண்ணிலா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்ற பொன்மலைப்பட்டி மலையடிவாரம் அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்த பி. கோப்பு ராஜா (30), பொன்மலைப்பட்டி கீழ உடையாா் வீதியைச் சோ்ந்த அ. பிராங்ளின் ஜோசப்ராஜ் (30), பொன்மலைப்பட்டி மலையடிவாரம் மதுரவீரன் கோயில் வீதியைச் சோ்ந்த ஹெச். பிரதீப் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.