/

திருச்சியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற மூவா் கைது

News image

கைது.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருச்சியில் தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்ற மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களையும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவா்களையும் குறிவைத்து கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பதைத் தடுக்கும் விதமாக மாவட்ட, மாநகரக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்மலைப்பட்டி தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் வெண்ணிலா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்ற பொன்மலைப்பட்டி மலையடிவாரம் அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்த பி. கோப்பு ராஜா (30), பொன்மலைப்பட்டி கீழ உடையாா் வீதியைச் சோ்ந்த அ. பிராங்ளின் ஜோசப்ராஜ் (30), பொன்மலைப்பட்டி மலையடிவாரம் மதுரவீரன் கோயில் வீதியைச் சோ்ந்த ஹெச். பிரதீப் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.