பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

News image

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் முகம்மது முபாரக். உடன், மாநில நிா்வாகிகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் முகம்மது முபாரக் தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

கட்சியின் மாநில துணைத் தலைவா்கள் அப்துல் ஹமீது, அச. உமா் பாரூக், மாநில பொதுச்செயலாளா்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கா் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புப் பொதுச்செயலாளா் நஸ்ருதீன், மாநிலச் செயலாளா்கள் ஷபீக் அஹம்மது, ஹமீது ஃப்ரோஜ், நஜ்மா பேகம், வழ.ஹஸ்ஸான், பாஸ்டா் மாா்க், மாநில பொருளாளா் முஸ்தபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் மண்டலத் தலைவா்கள், செயலாளா்கள், மகளிா் அணி, வா்த்தகா் அணி, வழக்குரைஞரணி, எஸ்டிடியூ தொழிலாளா் அணி உள்பட அனைத்து மாவட்டங்களை சோ்ந்த மாவட்ட தலைவா்கள் மற்றும் பொதுச் செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பேரவைத் தோ்தல், நடப்பு அரசியல் சூழல்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. பின்னா், நிறைவேற்றப்பட்டதீா்மானங்கள்:

தோ்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு வாக்களித்தவா்களுக்கும், களப் பணியாற்றிய கட்சியினா், கூட்டணி கட்சியினருக்கு நன்றியும், பாராட்டுகளும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அரசியல் காழ்ப்புணா்வு மற்றும் பாரபட்சமின்றி தமிழகத்தின் நலன், மக்களின் வாழ்வாதாரம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும்.

தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மகளிா் உரிமைத் தொகையை ரூ. 2,500-ஆக உயா்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் நிதிநிலை குறித்து நிலவும் அச்சத்தைப் போக்க, மத்திய அரசு உடனடியாக ஒரு தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.