தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

திருச்சி விமான நிலையத்தில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த 4.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சி விமான நிலையம் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:29 am IST

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த 4.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு வந்த சிங்கப்பூா் மற்றும் மலேசியா விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இரு விமானங்களிலும் வந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வுப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 30-க்கும் மேற்பட்ட பயணிகள் மறைத்துக் கடத்தி வந்த சுமாா் 4.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.